மாணவனின் நெஞ்சில் உதயமான முதல் கவிதை.

பள்ளி மாணவன் ஒருவன் தனது சக தோழியுடன் காதல் கொள்கிறான்ஆனால் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவித்தான் !  ஏதோ அவன் தவிப்பினாலோ அல்லது அவன் தமிழ் மீது வைத்திருந்த அன்பினாலோ கலைமகள் அவனது நாவில் குடியேற சுருதி ஒன்றைக் கூற பேனாவோ அதை எழுதியது.


                           

                      பேனா எழுதிய சுருதி:

   கங்கையும் யமுனையும் ஒன்று சேர்ந்த இடம் பிரயாக்ஜியம்,

  அறிவும் அழகும் ஒன்று சேர்ந்த இடம் மராட்டியம் !

    அன்று முகலாயர்களை  வீழ்த்தியது  சிவாஜியின் படை,

    இன்றோ எனை வீழ்த்தியது   பெண்ணே உன் நடை !

    கடிகாரத்திற்கோ கால் இல்லை ,

    உன் சுருதியை கோர்க்க வரியில்லை !

    நாட்டியம் ஆடும் பெண்ணின் சிலம்பிலிருந்து கேட்டதோ  ஓர்  ஓசை ,

   என்னை தூங்கா வைத்திருக்கும் பெண்ணே உந்தன் குரலோசை !

   பயிர்களை காக்க வேலியுண்டு !,

   உன்னை காதலிக்க என்ன வழி உண்டு?

   சொல் பெண்ணே !! 

                                                                  --  பரதேசி







              


                                                       


Comments